செல்போன் கிடையாது.. சாப்பாடு கிடையாது.. படிச்சும் அறிவு இல்லையா..? வீட்டு வேலை செய்த பணிப்பெண்ணை.. பெங்களூருவில் அதிர்ச்சிச் சம்பவம்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற இந்திய மேலாண்மை கழக (IIM-B) வளாகத்திற்குள் வசித்து வரும் தம்பதி, தங்களது வீட்டில் பணிபுரிந்த ஆயாவை (Nanny) துன்புறுத்தியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், அந்தத் தம்பதியினர் தனக்குச் சரியாக உணவு வழங்காமலும், செல்போன் பயன்படுத்த அனுமதிக்காமலும் வீட்டுச் சிறையில் வைத்திருந்தது போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களாக அந்த வீட்டில் பணிபுரிந்து வந்த இந்தப் பெண், தன்னை வெளியில் எங்கும் செல்ல விடாமல் தம்பதியினர் தடுத்ததாகவும், கடுமையான வேலைப்பளுவைக் கொடுத்ததுடன் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண், எப்படியோ தப்பித்துச் சென்று காவல்துறையினரிடம் தஞ்சம் புகுந்துள்ளார். இது குறித்துத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

   

இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூரு போலீஸார் சம்பந்தப்பட்ட தம்பதியினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஐஎம் பெங்களூரு போன்ற உயர்மட்ட கல்வி நிறுவன வளாகத்திற்குள் இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவம் நடந்துள்ளது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.