1990களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் சினிமாவில் பிஸியாக காணப்படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
இவரது இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் அன்றாடம் நம் உண்ணும் பழங்களிலிருந்து தூக்கி எறியும் பழத்தோல்களை வைத்து ஹேண்ட் பேக்கை உருவாக்கியுள்ளார் .பழங்களின் தோளிலிருந்து பைகள் உருவாக்கப்படுது உலகிலேயே இதுவே முதல் முறை.
இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும், அவர் தொடங்கியுள்ளார்.இந்த நிறுவனத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நடிகர் கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன், அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அஞ்சனா அர்ஜுனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.