வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எதிரி நாட்டினரால் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பதிலடியாக உடனடியாக அணுஆயுதத் தாக்குதலைத் தொடங்குவதற்கான புதிய சட்டத் திருத்தத்தை வடகொரிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தலைமைக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் அதிகாரத்தை வடகொரியா சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் போரைத் தொடர்ந்து, வடகொரியா தனது தற்காப்பு மற்றும் எதிரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. உலகளாவிய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இத்தகைய கடுமையான முடிவுகளை வடகொரிய அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
