BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

By Muthu Mani on வைகாசி 7, 2026

Spread the love

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏதுவாக, பள்ளிக் கல்வித்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பப்படும் என்றும், அதுமட்டுமின்றி அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகியவற்றின் வாயிலாகவும் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.