தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக் கடிதத்தை விரைவில் ஆளுநரிடம் வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மரபுப்படி, ஆளுநர் முதலில் தற்காலிகச் சபாநாயகருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
அதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, செங்கோட்டையன் சட்டப்பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் பொறுப்பை மேற்கொள்வார். அத்துடன், செங்கோட்டையன் சட்டப்பேரவை முன்னவராகவும் (Leader of the House) செயல்பட உள்ளதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
