தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விசிக கணித்தபடியே சட்டசபையில் ‘தொங்குநிலை’ உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) மக்கள் தனிப் பெரும்பான்மையை வழங்காததால், அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற நிலையில் தவெக தவிப்பதாகக் கூறியுள்ள அவர், விசிக முன்னமொழிந்த ‘கூட்டணி ஆட்சி’ என்ற முறையையே மக்கள் தற்போது வழிமொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காகத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகத் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
