தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரசாரங்களுக்குப் பிறகு கடந்த சில நாட்களாகக் கொடைக்கானலில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வந்தார். அங்கு தங்கியிருந்த ஐந்து நாட்களில் அவர் தினசரி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதற்கிடையில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
நேற்று தனது ஓய்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவதற்காகக் காரில் புறப்பட்டபோது, அங்கு காத்திருந்த சிறுமி ஒருவர் முதல்வரைப் பார்த்து, “தி.மு.க., தான் கெத்து; த.வெ.க., எல்லாம் வெத்து” என்று அரசியல் பஞ்ச் டயலாக் பேசினார். சிறுமியின் இந்தப் பேச்சைக் கேட்டு வியந்த முதல்வர் ஸ்டாலின், அதனை மிகவும் ரசித்தபடி அங்கிருந்து சிரித்துக் கொண்டே மதுரைக்குக் கிளம்பினார். இந்தப் புதுமையானச் சந்திப்பு அங்கிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
