5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

By Nanthini on சித்திரை 16, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது கட்சியின் முதல் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இதில் குறிப்பாக, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அதிரடி அறிவிப்பு இடம்பெறக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் அனலை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வரும் நிலையில், விவசாயிகளின் வாக்குகளைக் கவரும் வகையில் விஜய் வகுத்துள்ள இந்த புதிய வியூகம் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த ஆழமான திட்டங்களை விஜய் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சாதாரண மக்களின் அன்றாடப் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் வகையிலான இந்த நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைய வாய்ப்புள்ளது.