அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஈரானின் ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்தது என்றும், அதன் எண்ணெய் கட்டமைப்புகளுக்கு தற்போது சேதம் விளைவிக்கவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தால் எண்ணெய் கிணறுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானிய தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களை “அறிவற்றவர்கள்” (deranged scumbags) எனக் குறிப்பிட்ட அவர், இன்று என்ன நடக்கிறது என்று “பொறுத்திருந்து பாருங்கள்” (Watch what happens) என பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைத் தளங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்காவிடம் அளவிட முடியாத ஆயுத பலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனிக்கு (Mojtaba Khamenei) எதிராக அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, ஈரான்-இஸ்ரேல் இடையேயான போரில் அமெரிக்காவின் நேரடிப் பங்களிப்பை மேலும் அதிகரித்துள்ளது.
