ஆட்சி அதிகாரத்தில் பங்கு… இறுதியில் அதிமுகவிடம் சரண்..? விஜய்யின் முடிவால் சீமானுக்கு அடித்த ஜாக்பாட்..!!

By Soundarya on பங்குனி 14, 2026

Spread the love

தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்று அறிவித்தும் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு முன்வராத நிலையில், தவெக தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் இணைய விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை அதிமுக – தவெக கூட்டணி உறுதியானால், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கும் ஒரே கட்சி என்ற அடையாளத்தை நாம் தமிழர் கட்சி மீண்டும் பெறும். இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கி, ‘கெத்து’ காட்ட சீமான் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

விஜய்யின் இந்த திடீர் அரசியல் நகர்வால், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கக்கூடும் என சீமான் தரப்பு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தனித்து நிற்கும் தார்மீக பலம் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.