“தினமும் வந்து தப்பா நடந்துக்குவார் ” தூக்கத்தில் வரும் கனவு… 15 வயது மைத்துனி சொன்ன பகீர்… 7 வருடம் சிறையில் அடைக்கப்பட்ட விமானப்படை அதிகாரி… கடைசியில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

கான்பூரில் நடந்த வினோதமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் போக்சோ (POCSO) வழக்கு ஒன்று, தற்போது சட்ட ரீதியான விவாதங்களை உருவாக்கியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, விமானப்படை அதிகாரியான அனுராக் என்பவர் தனது 15 வயது மைத்துனியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருமணமான சில நாட்களிலேயே தன் மீது சுமத்தப்பட்ட இந்தப் பழியால் அவர் 19 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததோடு, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது நிம்மதியை இழந்து நீதிமன்றப் போராட்டத்தை எதிர்கொண்டார்.

இந்த வழக்கின் விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மொத்தக் கதையையும் மாற்றியது. தான் அதிக வீரியம் கொண்ட மருந்துகளை உட்கொண்டிருந்ததால் அரைத் தூக்கத்தில் இருந்ததாகவும், அப்போது தனது கனவில் மைத்துனர் தன்னைத் தீண்டுவது போல் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். “உண்மையில் எதுவும் நடக்கவில்லை, அது ஒரு மாயை; கனவில் நடந்ததை நிஜம் என்று நினைத்துக் கத்தினேன்” என்று அவர் ஒப்புக்கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அனுராக் நிரபராதி எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.

   

நீதிமன்றம் இந்த வழக்கை வெறும் விடுதலையோடு முடிக்காமல், பொய்யான வழக்கைத் தொடுத்த சிறுமியின் தந்தை விஜய் திவாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஆதாரமற்ற புகாரை அளித்து ஒருவரின் வாழ்க்கையைச் சிதைக்க முயன்றதற்காக அவர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யவும், நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். கனவை நிஜம் என்று நம்பி ஒரு அதிகாரி சிறை சென்ற இந்தச் சம்பவம், போலி வழக்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தோல் உரித்துக் காட்டியுள்ளது