அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியை அவமதித்ததாகப் புகார் எழுந்துள்ளது. அவர் தனது தோளில் தேசியக் கொடியைப் போர்த்தியபடி தனது காதலி மஹியகா சர்மாவுடன் (Mahieka Sharma) தரையில் படுத்துக் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Pune: Advocate Wajid Khan says, "You must have seen the T20 World Cup here. Hardik Pandya was dancing with his girlfriend in celebration of his victory. The national flag was tied to his back… According to Section 2 of the 1971 National Flag Act, we should respect the… pic.twitter.com/mHVHn336ql
— ANI (@ANI) March 12, 2026
இது தொடர்பாக புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் (Wajid Khan), புனேவில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். தேசியக் கொடியை உடலில் சுற்றியபடி அவர் நடந்து கொண்ட விதம் தேசியக் கொடியின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும், இது 1971-ஆம் ஆண்டு தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த ஹர்திக் பாண்டியா, தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை மறந்து இத்தகைய செயலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
