தமிழ் சினிமாவில் இசைப்புயல் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏஆர் ரகுமான். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் கூறியதாவது, பசங்களுக்கு திடீர்ன்னு அட்வைஸ் கொடுத்தால் ஒண்ணுமே கேட்க மாட்டாங்க. உங்களோட நடத்தை தான் அவங்களுக்கு நீங்க கொடுக்கிற அட்வைஸ். நீங்க எப்படி நடந்துக்கிறிங்களோ அப்படித்தான் உங்க பசங்க உங்களை பாத்து மத்தவங்ககிட்ட நடந்துப்பாங்க.
நீங்க எல்லாத்தையும் பண்ணீட்டு நீ பண்ணாதேன்னு பசங்க கிட்ட சொன்னால் அவன் கேட்க மாட்டான். அப்பாக்கள் தான் பசங்களோட கண்ணாடி. எங்க அப்பாவுக்கு நான் பிள்ளையா பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று இசைப் புயல் ஏஆர் ரகுமான் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
