court order

என் பாட்டு என் பாட்டு… இளையராஜாவுக்கு டெல்லி கோர்ட் வைத்த குட்டு – இப்படி ஒரு தீர்ப்பா என ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 17, 2026

Spread the love

இசையமைப்பாளர் இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களை வேறு திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது. மற்ற ஆடியோ நிறுவனங்களும் அதை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறி காப்புரிமை கோரி வருகிறார். இந்நிலையில் கடந்த 1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை இந்த காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் இசையும் மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என்று சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது இளையராஜா இந்த பாடல்களை தனது சொந்த பாடல்கள் என்று கூறி அமேசான் மியூசிக் ஐடியூன்ஸ் மற்றும் ஜியோ சாங்க் போன்ற டிஜிட்டல் ஸ்ட்ரீம் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என்று வாதம் செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி துஷார் ராவ் கெடேலா அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

   

அவரது தீர்ப்பில், சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார். இந்த தடையை விதிக்கவில்லை என்றால் சரிகம நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த அதிரடி தீர்ப்பு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பயங்கர பின்னடைவை தந்துள்ளது.