சென்னை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, நல்ல கருத்து விவாதத்துக்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள் அதை விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்ன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இது வந்து ஜனநாயகம். இப்படித்தான் இருக்கும். விவாதங்கள் தொடர வேண்டும்.
எங்கள் கூட்டணி மொத்த இந்தியாவுடன். இந்தியா தான் என்னுடைய நலன். உங்களுடைய நலனும் கூட. கூட்டணி எல்லாம் 5 வருஷங்களுக்கு ஒருமுறை பண்றது இல்லையா? ஐடியாலஜி தான் முக்கியம். அதை நோக்கி தான் நான் போயிட்டு இருக்கேன். பார்லிமென்ட்டில் நான் பேசுவது புரியவில்லை என்று சொல்பவர்கள் நிறைய படிக்க வேணும், நிறைய படிக்கணும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
