“என் புள்ள வெளிநாட்டுல கஷ்டப்படுறான் உனக்கு காதல் கேக்குதா” கண்டித்த மாமனார்… வாயை பொத்தி கழுத்தை அறுத்து வீடியோ எடுத்த மருமகள்… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரைக் மருமகளே காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி ராஜ்பர் என்ற பெண்ணின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பிங்கிக்கு ராம்மிலன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை பிங்கியின் மாமனார் சுபச்சன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பிங்கி, தனது மாமனார் தன்னைத் தவறாக நடத்துவதாகக் காதலனிடம் பொய் கூறி அவரைத் தீர்த்துக்கட்டச் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

திட்டத்தின்படி, பிப்ரவரி 1-ம் தேதி இரவு ராம்மிலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுபச்சனை மது அருந்தலாம் என ஆசை வார்த்தை கூறி கிணற்றடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் சுபச்சனின் வாயைப் பொத்தி கத்தியால் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் செயலை அவர்கள் மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிங்கி, அவரது காதலன் ராம்மிலன் மற்றும் உதவிய நண்பர்கள் என நான்கு பேரையும் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீடியோ ஆதாரங்களை மீட்டெடுத்துள்ளனர்.