காதலியுடன் ஹோட்டல் ரூமில் உல்லாசம்…. அந்த ரகசியத்தை கேட்டு டென்ஷனான காதலன்…. இறுதியில் நடந்த பயங்கரம்….!

By Nanthini on மாசி 4, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், ஆறு மாத கால காதலில் ஏற்பட்ட கசப்பான உண்மைகளால் ஒரு இளம்பெண் தன் காதலனாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் பட்டதாரியான அர்ஜுன் என்பவரும், மீரா என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்தனர். அர்ஜுன் தனது காதலி மீராவை உண்மையாக நேசித்ததோடு, தனது வீட்டில் நிச்சயிக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான வரதட்சணையுடன் கூடிய திருமணத்தையும் மீராவிற்காக உதறித் தள்ளத் தயாராக இருந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று இருவரும் ஒரு ஹோட்டல் அறையில் தனிமையில் இருந்தபோது, மீரா தனது கடந்த கால ரகசியம் ஒன்றை அர்ஜுனிடம் வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், அந்தத் திருமண உறவிலிருந்து இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அர்ஜுன், தான் இவ்வளவு காலம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார்.

   

இந்த ஆத்திரத்தில் அர்ஜுன், மீராவை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அவர் மீராவின் மார்புப் பகுதியில் பலமாகத் தாக்கியதில், விலா எலும்புகள் முறிந்து நுரையீரலில் குத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மீரா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீராவிற்கு அணிவிப்பதற்காக ஒரு சிறிய தாலியுடன் வந்த அர்ஜுன், எதிர்பாராத இந்த வாக்குவாதத்தால் நிலைதடுமாறி கொலைக் குற்றவாளியாக மாறினார்.

   

மறுநாள் காலை ஹோட்டல் ஊழியர்கள் அறையைச் சோதித்தபோது மீரா பிணமாகக் கிடப்பது தெரியவந்து, போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஒரு நிமிடம் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கோபத்தால், மீராவின் உயிர் பறிக்கப்பட்டதோடு, அர்ஜுனின் பிரகாசமான எதிர்காலமும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் முடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.