Actor Sarathkumar

3 நடிகைகள் மீது தீராத காதல்… ஒரு நடிகையுடன் லிவிங் டு கெதர் – நாட்டாமை நடிகர் குறித்து இப்படி ஒரு தகவலா? – ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 2, 2026

Spread the love

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர் நடிகர் சரத்குமார். அவரது மனைவி பெயர் சாயாதேவி. ஆனால் சினிமாவில் நடித்து பிரபலமான பிறகு சரத்குமார் தன்னுடன் 4 படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஹீராவை ஒருதலையாக காதலித்தார். ஆனால் சரத்குமார் திருமணமானவர் என்பதால் ஹீரா அவரை கண்டுகொள்ளவில்லை.

அதன் பிறகு சூரியவம்சம் மூவேந்தர் படங்களில் தன்னுடன் ஜோடியாக நடித்த தேவயானியை நடிகர் சரத்குமார் காதலித்த நிலையில் தேவயானியும் சரத்குமார் காதலை ஏற்க மறுத்துவிட்டார் அதன்பிறகு நாட்டாமை நாடோடி மன்னன் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நடித்த நடிகை மீனாவையும் சரத்குமார் காதலித்தார். ஆனால் வயது வித்யாசத்தை காரணமாக எங்கள் மகளை உங்களுக்கு தர முடியாது என சரத்குமாரிடம் மீனாவின் அம்மா கூறிவிட்டார்.

   

இதைத் தொடர்ந்து நடிகை நக்மா மீது சரத்குமாருக்கு காதல் உருவானது. ஜானகிராமன் ரகசிய போலீஸ் போன்ற படங்களில் இருவரும் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு சென்னையில் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாக அப்போது தகவல் வெளியானது. ஆனால் ஒரு கட்டத்தில் சரத்குமார் போட்ட கண்டிஷன்களால் அவரை வெறுத்து நக்மா பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகுதான் நடிகை ராதிகாவை நடிகர் சரத்குமார் 2வது திருமணம் செய்ததாக இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.