“தவெக 3.0, 2026-ல் கோட்டை நமதே”… காலையிலேயே விஜய் வெளியிட்ட எமோஷனல் ட்வீட்… அதிரப்போகும் தமிழக அரசியல் களம்….!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் (பிப்ரவரி 2, 2026) வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய், தனது தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் இயக்கமாகத் தடம் பதித்த தவெக, தற்போது ஒரு முழுமையான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதை அவர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய் தனது அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் என்பது சலனங்களால் அசைக்க முடியாத ஆழ்கடல் போன்றது” என்று குறிப்பிட்டுள்ளார். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதாகவும், அதற்கு தவெக-வின் வருகையே முக்கியக் காரணம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எவராலும் புறக்கணிக்க முடியாத ஒரு விரிவானமாக கட்சி வளர்ந்து நிற்பதை அவர் தனது பதிவில் உறுதிபடக் கூறியுள்ளார்.

   

தேர்தல் களத்தில் வெறும் பங்கெடுப்பது மட்டுமே தவெக-வின் நோக்கமல்ல, மாறாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே இறுதி இலக்கு என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். “தேர்ந்த தெளிவுடனும், திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் களத்தை அணுகுவோம்” என்று கூறியுள்ள அவர், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியல் வெற்றியை நோக்கிய பயணத்தில் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

   

இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கப்போகும் அமோக ஆதரவுடன், ஜனநாயக முறையில் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றுவது உறுதி என்று விஜய் சூளுரைத்துள்ளார். கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக அரசியல் களத்தில் தவெக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது.