ஸ்டூடியோவில் வன்கொடுமை முயற்சி…. அந்தரங்கப் படங்களை அனுப்பிய பாடகர்…! திரைத்துறையின் இருண்ட பக்கங்களை உடைத்த சின்மயி…!

By Devi Ramu on தை 27, 2026

Spread the love

சினிமா துறையில் நிலவும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் ‘காஸ்டிங் கவுச்’ கொடுமைகள் குறித்து பின்னணி பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு பெண் இசைக்கலைஞரை ஸ்டூடியோவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது மற்றும் ஒரு ஆண் பாடகர் பெண் கலைஞர்களுக்குத் தனது அந்தரங்க உறுப்புகளின் புகைப்படங்களை அனுப்பித் தொல்லை கொடுத்தது போன்ற அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

திரைத்துறையில் ‘கமிட்மெண்ட்’ என்ற சொல்லுக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கப்படுவதாகவும், அதிகாரத்தில் உள்ள ஆண்கள் பெண்களைத் தங்களுக்கு உரிமைப்பட்டவர்களாகக் கருதுவதே இத்தகைய வன்முறைகளுக்கு அடிப்படை காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

   

முன்பு வைரமுத்து மீது தான் கொடுத்த புகாரை நினைவுகூர்ந்த சின்மயி, தனது தாய் அருகிலேயே இருந்தபோதும் அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார். சௌகார் ஜானகி போன்ற மூத்த கலைஞர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இல்லாமல், அவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

   

தற்காலத்தில் உயர்கல்வி கற்றுத் துறைக்கு வரும் பெண்கள் இங்கு நடக்கும் சுரண்டல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள் என்றும், பெண்களுக்கு வேலை தருவதால் அவர்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தலாம் என்ற ஆண்களின் மனநிலை மாற வேண்டும் என்றும் அவர் அந்தப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.