விமான நிலையத்தில் கொடூரம்.! “பைக்குள் ஏதோ சத்தம் கேட்குது” கொரியப் பெண்ணைக் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று… சிசிடிவியில் அம்பலமான ஊழியரின் வக்கிர புத்தி…!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்கு நேர்ந்த இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த அஃபான் அகமது, டிக்கெட் பரிசோதனையின் போது ஒரு கொரியப் பெண்ணை வழிமறித்துள்ளார். அந்தப் பெண்ணின் பையிலிருந்து ‘பீப்’ ஒலி வருவதாகக் கூறி, சோதனையிட வேண்டும் என அவரைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். பாதுகாப்பு சோதனையிட வேண்டிய இடத்திற்குப் பதிலாக, திட்டமிட்டு அந்தப் பெண்ணை ஆண்களுக்கான கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கழிப்பறைக்குள் வைத்து அந்தப் பெண்ணை சோதனையிடுவதாகக் கூறி, அஃபான் அகமது அவரிடம் பாலியல் ரீதியாக மிகவும் தவறான முறையில் அத்துமீறி நடந்துகொண்டார். இந்த வக்கிரச் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். விமான நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அஃபான் அகமது அந்தப் பெண்ணைத் தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இந்த வெட்கக்கேடான செயலில் ஈடுபட்ட அஃபானை போலீசார் கைது செய்துள்ளனர். சர்வதேசப் பயணிகள் வரும் ஒரு முக்கியமான இடத்தில், ஊழியரே இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.