இந்தோனேசியாவைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தன்னிடம் ஸ்மார்ட்போன் (Smartphone) இல்லாத காரணத்தால் சக மாணவர்களால் கடுமையான கேலிக்கும், கிண்டலுக்கும் (Bullying) ஆளாக்கப்பட்டார். இந்தத் தொடர் கொடுமைப்படுத்துதலால் அந்த மாணவி கடும் மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளானார். இதன் விளைவாக, அவர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, வீட்டிலேயே படுக்கைப் பாயில் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
🚨⚡An Indonesian student was bullied at school for not owning a phone, causing her severe psychological trauma that led her to quit school and stay bedridden.
The wife of the deputy governor of Purwakarta visited her, providing psychological and financial support and gifting… pic.twitter.com/IEHoZvcCZg
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) January 8, 2026
இந்தச் செய்தியறிந்த பூர்வகர்த்தா (Purwakarta) துணை ஆளுநரின் மனைவி, பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவியின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தத் தேவையான உளவியல் ஆலோசனைகளுக்கும் (Counseling), அவரது குடும்பத்தின் நிதித் தேவைகளுக்கும் அவர் ஏற்பாடு செய்தார். மேலும், மாணவி மீண்டும் கல்வியைத் தொடர ஊக்கமளிக்கும் வகையில் அவருக்கு ஒரு புதிய தொலைபேசியையும் பரிசளித்தார்.
