தெலுங்கானா மாநிலம் நாராயணன்பேட் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிவராமலு (32) என்பவருக்கும் சுஜாதா என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ரித்திகா என்ற மகளும் ஆறு வயதில் சைதன்யா என்ற மகனும் இருந்தன . திருமணமானது முதலே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தம்பதி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். குழந்தைகள் இருவரும் தந்தை பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் மனமுடைந்து வாழ்ந்து வந்த சிவராமலு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவித்து வந்தார். நிலையில் நேற்று முன்தினம் இரண்டு குழந்தைகளையும் விவசாய நிலத்திற்கு அழைத்து சென்று அங்கு அமைக்கப்பட்ட குடிசையில் குழந்தைகளை தூங்க வைத்துள்ளார்.
அதன் பிறகு ஆழ்ந்த உறக்கத்திலிருந்து குழந்தைகள் இருவரையும் கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்குள்ள ஏரியில் குழந்தைகளின் உடல்களை வீசி உள்ளார். பின்னர் அவர் தயாராக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தவுடன் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் மூழ்கிக் கிடந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
