கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் பாஜக பெண் நிர்வாகி சுஜாதாவை போலீசார் கைது செய்தபோது அரங்கேறிய சம்பவங்கள் அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுஜாதா, போலீசார் தன்னை வாகனத்திற்குள்ளேயே ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தாக்கியதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவினர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தரப்பு முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை அளித்துள்ளது. சுஜாதாவே தானாக முன்வந்து தனது உடைகளைக் களைந்து கொண்டு நாடகமாடுவதாகவும், தடுத்த பெண் காவலர்கள் நான்கு பேரை அவர் கடித்துக் குதறியதாகவும் ஹுப்பாலி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுஜாதா மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையிலான இந்த மோதல் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
