யாருக்குமே நடக்கக்கூடாத கொடுமை…! 6 மாதக் குழந்தையுடன் பைக்கில் சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த கதி…. கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on தை 3, 2026

Spread the love

தென்காசி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர், தனது மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட கோர விபத்தில் உயிரிழந்தார். கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்தபோது, மதுரையை நோக்கிச் சென்ற கார் இவர்களது வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நான்கு பேரும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் காவலர் கண்ணன் மற்றும் அவரது 5 வயது மகன் ராம் கிரிஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். கண்ணனின் மனைவி செல்வராணி மற்றும் 6 மாதக் குழந்தையான ராம் கிரிடிக் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தத் துயரச் சம்பவம் குறித்து இடைகால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.