குஷியோ குஷி..! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு..!!

By Soundarya on தை 3, 2026

Spread the love
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை வரும் ஜனவரி 6-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காகச் சுமார் 1,600 சிறப்புப் பேருந்துகளை இயக்க முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி தெற்கு ரயில்வேயும் பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்கள் எவ்விதச் சிரமமும் இன்றிப் பயணிக்கத் தேவையான விரிவான போக்குவரத்துத் திட்டங்கள் இந்தப் பொங்கல் விடுமுறைக்கு முன்னதாகவே இறுதி செய்யப்படவுள்ளன.