நீலகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அக்ஷயா ஆச்சார்யா (78) இன்று காலமானார். நீலகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் காங்கிரஸ் மூத்த தலைவருமான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது இல்லத்தில் இன்று அவர் உயிர் பிரிந்தது. 1980 முதல் 1985 ஆம் ஆண்டு வரையும், 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரையும் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவருடைய மறைவுக்கு ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
