காலையிலேயே ஷாக் நியூஸ்… வங்கதேச முன்னாள் பிரதமர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!

By Nanthini on மார்கழி 30, 2025

Spread the love

அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா(80) இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

ஏற்கனவே நீரிழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் இதய கோளாறு போன்ற உடல்நல பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இன்று காலை 6:00 மணிக்கு அவர் காலமானதாக மருத்துவமனை தரப்பிலும் அவருடைய கட்சித் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.