புனேவைச் சேர்ந்த இந்த மருத்துவர் தம்பதியினர், திருமணமான சில மணிநேரங்களிலேயே பிரிய முடிவெடுத்தனர். திருமண சடங்குகள் முடிந்து வீடு திரும்பிய உடனேயே, இருவருக்கும் இடையே இணக்கமின்மை மற்றும் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், திருமணமான 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர்.
பொதுவாக விவாகரத்துக்கு 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஒன்றாக வாழவே இல்லை என்பதாலும், எதிர்காலத்தில் இணைவதற்கு வாய்ப்பில்லை என்பதாலும், நீதிமன்றம் விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக விவாகரத்து வழங்கியது. இவர்களின் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டபோது, இருவரின் ரசனை மற்றும் கொள்கைகள் முற்றிலும் வேறாக இருப்பதை உணர்ந்ததால் இந்தப் பிரிவை மேற்கொண்டனர்.
