தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதே சமயம் கட்சியை களை எடுக்கும் பணியிலும் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து 3 நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி வடசென்னை நிர்வாகிகள் லண்டன் வெங்கடேஷ், விசுவாசி மற்றும் கலையரசு ஆகியோர் கட்சி விதிகளை மீறி செயல்பட்டதால் அவர்களை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்ப்பு வைக்கக்கூடாது எனவும் இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
