தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தேவையான பிறப்பிடச் சான்றிதழை வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணம் இன்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் பொதுமக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அணுகி கையெழுத்து பெற்ற சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய வாக்காளர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
