பெண்களே குட் நியூஸ்..! தொழில் தொடங்க போறீங்களா..? ரூ.1 லட்சம் கொடுக்கும் தமிழக அரசின் திட்டம்…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் மட்டும் 392 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத் தொழில் மையங்கள் வாயிலாக ஒருங்கிணைக்கப்படும் இத்திட்டம், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மாநிலத்தின் தொழில் புரட்சிக்கு வித்திடுகிறது.