“திராவிடம்” என்பது தமிழரல்லாதவர்கள் சொகுசாக வாழ்வதற்கும், தமிழகத்தை ஆளுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு கருவி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் , தங்களைத் திராவிடர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், தங்களைத் தமிழர்களாகக் கருதுபவர்கள் மட்டுமே தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளால் தமிழக மக்களுக்கோ அல்லது தமிழினத்திற்கோ எந்தப் பயனும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க ‘திராவிடம்’ என்ற போர்வை தேவையில்லை என்றும், தமிழ் தேசிய அரசியலே தீர்வாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
