அடச்சி வெக்கமா இல்லையா..? ஓடும் ரயிலில் மாணவியிடம் சில்மிஷம் செய்த காவலர்… துணிச்சலாக மாணவி செய்த காரியத்தால் ஆப்பு…!!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love
சென்னையிலிருந்து கோவை சென்ற இண்டர்சிட்டி விரைவு ரயிலில், கல்லூரி மாணவியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு, சக பயணியாக வந்த காவலர் அநாகரிகமாக நடந்து கொண்டார். இவர் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தனது கைபேசியில் நடந்ததை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

மாணவி அளித்த புகாரையும், வீடியோ ஆதாரத்தையும் பரிசீலித்த உயர்மட்ட அதிகாரிகள், அந்த காவலரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலரே இது போன்ற செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் துணிச்சலான செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.