மத்திய பிரதேசம் மாநிலத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு உருவ பொம்மை வைத்து இறுதி சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் விதிஷாவை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான கவிதா சமீபத்தில் காணாமல் போனதால் அவருடைய குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதியில் தேடினர். அதன் பிறகு கவிதா காதலனுடன் ரகசிய திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தங்களுடைய மகள் இறந்து விட்டதாக அறிவித்தனர். அவருக்கு அடையாளபூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்த நிலையில் மாவால் செய்யப்பட்ட கவிதாவின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
மயானத்தை அடைந்த பிறகு குடும்பத்தினர் புதைக்க தயார் செய்தனர். அனைத்து சடங்குகளும் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட இறுதி சடங்கின் ஒரு பகுதியாக உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம் பாபு, தன்னுடைய மகளின் முடிவால் குடும்பம் முற்றிலும் குறைந்துவிட்டது. இது தனது வாழ்வின் மிகவும் வேதனையான தருணம் என்று அவர் கூறியுள்ளார். உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டு சென்று தீ வைத்து எரித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
