தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த தேர்தலை எதிர்கொள்ள பல வியூகங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இப்படியான நிலையில் 2026 தேர்தலில் ஆரணி உள்ளிட்ட 120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட வேண்டும் என ஒன்றிய செயலாளர் ஜிவி.கஜேந்திரன் விருப்பமான அளித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 120 தொகுதிகளுக்கும் தலா 15,000 என 18 லட்சம் செலுத்தி ஈபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கடந்த 15ஆம் தேதி தொடங்கிய விருப்ப மனு வழங்கும் பணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் இபிஎஸ்-காக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
