கோவையா..? கரூரா..? போட்டியிடும் தொகுதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் செந்தில் பாலாஜி..!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கரூருக்குப் பதிலாகக் கோவையில் போட்டியிடப்போவதாகப் பரவிய வதந்திகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கரூர் மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பினால், தான் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் வெற்றி பெறச் செய்துள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

கரூர் தொகுதி தமக்கு மிகவும் சாதகமாக இருக்கும்போது, கோவையில் போட்டியிடுவது குறித்த சந்தேகங்களுக்கு இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார் வரவிருக்கும் தேர்தலிலும் தான் கரூர் தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.