தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதனைப் போலவே திருப்பூரில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்துள்ளனர்.
