பாதுகாப்பான முதலீடு மூலம் உத்தரவாதமான மற்றும் நல்ல வருமானம் பெற விரும்புவோருக்கு, அஞ்சல் அலுவலக நேர வைப்புத் திட்டம் (Post Office Time Deposit Scheme – TD) ஒரு சிறந்த தேர்வாகும். இது அரசு ஆதரவு பெற்றிருப்பதால், இதில் முதலீடு செய்யப்படும் பணம் 100% பாதுகாப்பானது. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் கால அவகாசத்தைத் தேர்வு செய்யலாம். இதில் 5 வருட காலத்திற்கு அதிகபட்சமாக 7.5% வட்டி விகிதம் கிடைக்கிறது.
உதாரணமாக, ஒருவர் 5 வருடத்திற்கு ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், அவருக்கு 7.5% வட்டி விகிதத்தில் முதிர்வு கால முடிவில் வட்டியாக மட்டுமே ரூ.2,24,974 கிடைக்கும். மொத்த முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும்.
இத்திட்டத்தில் சேர குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும், அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. ஒருவர் ஒற்றைக் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கு திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் இந்தக் கணக்கைத் திறக்க முடியும். மேலும், 5 வருட நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்வது பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தில் சில அடிப்படை ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
