ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகம் பகுதிகளில் கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக கரையோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசிவருகிறது. மணிக்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் கடல் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இன்று கடல் காற்றின் வேகம் 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து நாட்டு படகு மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்குள் செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இன்று ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் பாம்பன் பகுதிகளும் பலத்த கடல் காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.