மனிதர்களுக்கு பதிலாக ஆடுகளை விடலாம் – எப்படிதான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ…? மகாராஷ்டிரா வனத்துறை அமைச்சர் சொன்ன வித்யாசமான ஐடியா!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து அஜித்பவரின் தேசியவாத எம்எல்ஏ மற்றும் வனத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சட்டசபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் கூறியதாவது, அஹல்யா நகர். புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபமாக கணிசமாக அதிகரித்து விட்டது. சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டது. முன்பு அவை வனவிலங்குகள் என்று விவரிக்கப்பட்டன.

ஆனால் இப்போது கரும்பு தோட்டங்களும் சிறுத்தைகளின் வாழ்விடமாக மாறிவிட்டன. சிறுத்தை தாக்குதலால் மனிதர்கள் இறந்த பிறகு அதற்கு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குகிறோம். அதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதை தடுக்க 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை காட்டுக்குள் விட வேண்டும். சிறுத்தைகள் அதிகமுள்ள ஆபத்தான பகுதிகளில் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்று ஜதேந்திரா கூறியிருக்கிறார்.