பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து விடும் தண்ணீர் பாட்டில்களுக்குள் மறைந்திருக்கும் அழுக்குகளை பார்ப்பதில்லை. இவை குழந்தைகளின் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். நாம் எப்பொழுதும் போல மேலோட்டமாக சுத்தம் செய்வதால் கிளீனாக இருக்கிறது என்று தான் நினைப்போம். ஆனால் ஒரு தந்தை தனது மகளின் தண்ணீர் பாட்டில்களைக் கழுவிய பிறகும் கூட முழுமையாக சுத்தமாகத் தெரியவில்லை என்பதைக் கவனித்தார்.
🚨 PARENTS ARE DISCOVERING HIDDEN BLACK MOLD INSIDE THEIR KIDS WATER BOTTLES – AND YOU’D NEVER KNOW IT WAS THERE
A warning for parents: A dad noticed his daughter’s Yeti water bottles never looked fully clean, even after washing them. When he boiled the lids – something most… pic.twitter.com/coswjQAojz
— HustleBitch (@HustleBitch_) December 7, 2025
அவர் தண்ணீர் பாட்டிலின் மூடிகளை வேகவைத்தபோது பாட்டில் மூடியிலுள்ள அச்சுகள் தளர்ந்து அதிலிருந்து கருப்பு நிறத்தில் அழுக்குகள் படிந்து போய் உள்ளது. பெரும்பாலான குழந்தைகளின் பாட்டில்கள் இதுபோல் பிரிக்க வடிவமைக்கப்படவில்லை. ஒருசில பாட்டில்களில் இதுபோன்று இருக்கும். இதை சரியாக சுத்தம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அதாவது ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் குடிக்கும் மறைக்கப்பட்ட முத்திரைகளுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. வெளியில் இருந்து பார்த்தால், எல்லாம் முற்றிலும் சாதாரணமாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.
