அடுத்த அதிரடி…. தவெகவில் இணைந்த பிறகு முதல் முறையாக செங்கோட்டையன் செய்த சம்பவம்…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.

   

இந்நிலையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த பிறகு கட்சி சார்பில் நடந்த அம்பேத்கர் நினைவு நாள் விழாவில் முதல் முறையாக செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை விஜயை அன்பு இளவல் (இளையவர்) என்று குறிப்பிட்டு வந்த நிலையில் இன்று முதல் முறையாக தலைவர் என்று கூறியுள்ளார். மேலும் விஜய் இன்று சுற்றுப்பயணத்தை (அம்பேத்கர் நிகழ்ச்சி) தொடங்க இருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சியில் இணைந்த பிறகு செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.