கலக்கப்போவது யாரு முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பழைய ஜோக் தங்கதுரை. இவருடைய ஜோக்குகள் எல்லாம் பழசாவும் போர் அடிக்கிற மாதிரியும் இருக்கும். அதிலும் குறிப்பாக இவர் சொன்ன புளிய மரத்து அடியிலே புஷ்பலதா மடியிலே என்ற ஜோக் வேற லெவலில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் பிரபலமான தங்கதுரை சினிமா துறையிலும் கூட நடித்து வருகிறார். இவருக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடிக்க கூடியவர். தமிழ் திரையுலகில் எங்கேயும் எப்போதும், மாநகரம், இன்று நேற்று நாளை மற்றும் அட்டகத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில் சர்வதேச சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று தங்கதுரை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு சக்கர நாற்காலி வண்டி வாங்கிகொடுத்துள்ளார் . மேலும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று தொடர்ந்து அவர்களை அரவணைத்து காத்து உறுதுணையாய் நிற்போம் இயன்ற அளவில் அவர்களுக்கு உதவுவோம்.
