சொகுசு காரில் வராவிட்டால் மதிக்கமாட்டாங்க…. உட்கார சேர் கூட கிடைக்காது… பாலிவுட் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பகிர்ந்த ஷாக் தகவல்..!!

By Soundarya on மார்கழி 3, 2025

Spread the love

ஹாலிவுட் திரையுலகம் மற்றும் மலையாளத் திரையுலகம் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கருத்துகளை பேசி உள்ளார். சமீபத்தில் பேசிய அவர் நான் பாலிவுட்டில் நடித்த போது நான் ஒரு நட்சத்திரம் என்று அனைவரையும் நம்ப வைக்க வேண்டி இருந்தது. என்னை சுற்றி எப்போதும் இரண்டு பேர் இருந்தார்கள். நாங்கள் ஒரு சொகுசு காரில் வந்தால் மட்டுமே அவர்கள் எங்களை நட்சத்திரமாக அங்கீகரித்தார்கள் .

இல்லையென்றால் படப்பிடிப்பு தளத்தில் உட்காரா ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள். மானிட்டரை பார்க்க ஒரு இடம் கூட ஒதுக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அதேநேரம் மலையாள திரைத்துறை குறித்து பேசிய அவர், எங்கள் துறையில் படங்களுக்கு அதிக செலவில் இங்கு யாரும் ஆடம்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை . பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்து கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.