தமிழகத்தின் துணை முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாடினார் .இவருடைய பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். அந்த வகையில் நடிகர் ரித்திகா உதயநிதி ஸ்டாலின் உடன் எடுத்து செல்பி புகைப்படத்தை பதிவிட்டு ஹாப்பி பர்த்டே என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த போட்டோவை ஏராளமானவர்கள் பலவிதமான கமெண்ட் செய்து ட்ரெண்டாக்கினார்கள். இதை பார்த்த நடிகர் ரித்திகா ஷாக் ஆகியுள்ளார் .இதனை எடுத்து அந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்பது குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அதில் சரவணன் இருக்க பயமேன் படத்தின் சூட்டிங் போது எடுத்தது. அதனால் அதை பதிவிட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். அதேபோல கோட் படத்திலும் ஒரு சின்ன ரோல் வாய்ப்பு கிடைத்தது. அது ரொம்ப சிறிய ரோல் என்பதால் நிராகரித்துவிட்டேன். ஆனால் அதில் நான் நடித்து விஜய் சாரோட ஒரு செல்பி எடுத்திருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். ஒன்னு தெரிஞ்சுக்கோங்க இவங்க எல்லாம் என்னுடைய சக நடிகர்கள். அவர்களோடு நான் போட்டோ எடுத்திருந்தால் நிச்சயம் அவர்களின் பிறந்தநாளுக்கு அதை பதிவிட்டு வாழ்த்து தெரிவிப்பேன்.
உதயநிதி ஸ்டாலினுடன் நான் போட்ட போட்டோவுக்கு அவ்வளவு கமெண்ட் போட்டீர்கள். நிறைய பேர் அரசியல் பார்வையோடும் பதிவிட்டுள்ளீர்கள். ஆனால் இதை என்னுடைய கமெண்ட் பாக்ஸில் காட்டி எந்தவித பயனும் இல்லை. இதையெல்லாம் உங்களுடைய ஓட்டில் காட்டுங்கள். யார் உங்களுக்கு பிடிக்குமோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். அதை விட்டுவிட்டு என்னுடைய போட்டோவிற்கு கமெண்ட் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.
