தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பல இடங்களிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். இறுதி நாளான டிசம்பர் நான்காம் தேதி வரை காத்திருக்காமல் படிவங்கள் விரைந்து வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
