ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் காவல்துறையின் மதிப்பை கேள்விக்குறியாகும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் ஒரு காவலர் அருவருப்பாக ஆடியது கண்டனங்களை பெற்றுள்ளது. கிருஷ்ணா மாவட்டம் அருகே உள்ள காந்தி குண்டா கிராமத்தில் நடந்த நாட்டுப்புற ஒத்திகையின் போது வீட்டு காவலராக பணியாற்றும் விஜயகுமார் என்ற நபர் ஒருவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமான மற்றும் ஒழுங்கு மீறிய நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ளது. குறிப்பாக அங்கு சிறுவர்கள் மற்றும் பெண்கள் அமர்ந்திருந்ததால் இந்த காட்சியை காண்போரை கோபத்தில் ஆழ்த்தியது.
இந்த வீடியோ வைரலானதும் காவல்துறையின் ஒழுங்கு மற்றும் பொது நடத்தை குறித்து கடும் விமர்சனங்கள் இழந்துள்ளது. பொது ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலரை இப்படி நடந்து கொள்ளலாமா என்று ஆவேசத்துடன் மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் காவலருக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றன. குழந்தைகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் காவல்துறை நடத்தை விதிகளை மீறும் செயலாகவே பார்க்கப்படுகின்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
కృష్ణ జిల్లాలో పోలీస్ కానిస్టేబుల్ అసభ్యకర నృత్యాలు
కంకిపాడు రూరల్ సీఐ జీప్ డ్రైవర్ అజయ్ కుమార్ మహిళతో చిన్నారుల ఎదుట చేసిన అశ్లీల నృత్యాల వీడియోలు సోషల్ మీడియాలో వైరల్ అవుతున్నాయి.
– ఘటనపై ఉన్నతాధికారులు విచారణకు ఆదేశించారు.@APPOLICE100
#KrishnaDistrict #Kankipadu #apPolice pic.twitter.com/Q1N4EiVRWH
— మన ప్రకాశం (@mana_Prakasam) November 25, 2025
