“ஐயோ அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” தோழியின் காதலருக்கு பேச செல்போன் கொடுத்த மாணவி… பயத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உயிரிழந்த மாணவி  தன்னுடைய  உறவுக்கார பெண் ஒருவருக்கு, ஒரு இளைஞருடன் பேச தனது செல்போனைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பெற்றோருக்கு தெரிந்தால் பெற்றோரின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும்  இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.