தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் அபிசதா. இந்த பெண்ணிற்கு திருமணமாகி ஏற்கனவே பெண்ணின் இரண்டரை வயது மூத்த மகன் உள்ள நிலையில் இரண்டாவது கர்ப்பமாகி கடந்த மாதம் 14ஆம் தேதி குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்ததால் கூடலூரில் தாய் வீட்டில் வசித்து வந்த அபிசதா, சம்பவத்தன்று வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது மூத்த மகன் விளையாடும்போது தவறி விழுந்ததில், இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தை பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
